Sunday, April 8, 2018

ஹான் ஒலி




                                                 ஹாண் ஒலி
                                   தூரத்து மலைமுகட்டிலிருந்து மெல்லிசாய்
                                 கேட்கத்துவங்கி, விரைந்து பக்கம் பக்கம் வரும்
                                 சங்கொலி போல், நீட்டிமுழங்கி
                                 வந்து கொண்டிருக்கும் அபாய ஒலி...,
                            நேரம் காலம், சமய சந்தர்ப்பப் பிரக்ஞையின்றி……
                        யாமங்களில்- அயர்ந்த தூக்க வேளைகளானால்
                               பிறகு தூக்கமில்லைபகல் பொழுதுகளில்- பணிகளில்
ஈடுபட்டிருக்கையிலென்றால்  பிறகு வேலையை தொடர இயலாத அவஸ்தை;         உணவு வேளைகளானால் பின்  அடைத்துக்கொள்ளும் தோண்டை…….
                              ஒரு படபடப்பு..நெஞ்சைப்பிழிவதுபோல்...
                              பயமா......? இல்லை  இல்லை...இன்னதென்று சொல்லத்தெரியாத மானசீக அவஸ்தை-அமைதியின்மை...
                             வலியாலோ வேறு ஏதோ பிராணாவஸ்தையாலோ
                            துடிதுடிக்கும் ஜீவாத்மா....அந்த அவஸ்தை எதையும் பகர்ந்து    வாங்க இயலாது பார்த்து  பரிதவிக்க மட்டும்  விதிக்கப்பட்ட
                           பக்கத்திலிருக்கும் உற்றோர் ஒரிருவர்….
                            இல்லை, ஒருவேளை உயிர் பறவைப்
                          பறந்து மறைந்துவிட்டதால், வண்டியின்
                          அசைவுகளால், கிடப்பில் அங்குமிங்கும்
                          ஆடி அசைந்துகொண்டிருக்கும் வெறும் கூடா.....?
                        இந்நாள் வரை,  தொலைவிலிருந்து தன்னை நோக்கிப்
                   பாய்ந்து கிட்டத்தில் வந்துவிட்டு,
                     எதையோ எடுக்க மறந்து விட்டதைப்போல
                  வந்த வேகத்திலேயே  தலைதெறிக்க
   எதிர் திசையில் பாய்ந்து சென்று மாய்ந்து மறைந்ததெல்லாம்
   தன்னை நாடி வருவதற்கான ஒத்திகையா?
   இதோ இதோ.... வழக்கம் போல் தூரதொலைவு
      மலைமுகட்டிலிருந்து கூவிவந்துகொண்டிருக்கும் சங்க நாதம்...
    நெருங்கி வந்ததும் நின்றுவிட்டதா.....
     யார் யாரெல்லாமோ தெரிந்த தெரியாதவர்கள்
   ஜட வஸ்துவை துக்கி உள்ளே தள்ளுவதைப்போல்
    கிடத்தும் போது, தலை கதவில் முட்டி மோதி வலித்தபோது.....
 இன்னும் கூண்டு முற்றிலும் காலியாகவில்லையா....
 மீண்டும் சங்கொலியா..பாய்ச்சலா கொஞ்சம் கொஞ்சமாய்
  அற்றுபோய்கொண்டிருக்கும் உணர்வு மணடலம் .....
.                                    நீல பத்மநாபன்     





No comments: