Friday, July 28, 2017

காலவெளியில்

                       
           அடிக்கடி சண்டித்தனம் பண்ணினாலும்
                     தோன்றிய நாளிலிருந்து அண்மை காலம்வரை,
                          சிற்சில நேரங்களில் அற்ப சுகங்களும்
                       ஆசுவாசங்களும் தந்து, கூடவே வந்து இயங்கி,
                  இயக்கிகொண்டிருந்த எல்லாமே காலச்சக்கிரத்தின்
               சுழற்சியின் அயற்சியில் பினவாங்கும் நேரமா......
                    முடங்கி விழுந்ததை எல்லாம் என்னதான்
                  பெருமுயற்சிச்செய்தும் மீண்டும்
                  இயக்கப்பாதையில் இழுத்துக்கொணர
                  இயலாத தருணங்கள்.......
                     விடிந்தும் விடியாத பொழுதுகளையும்,
                   புள்ளினங்களும் செடிகொடிகளும்
                     மலரும் மர்ம நொடிகளையும்
                    கண்டுகளித்த மதுர கணங்களும்
                    ஒரு நாளும் திரும்பி வரவே வராமல்
                    போய் மறந்து மறைந்தே விட்டனவா......?
          சுகமும் ஆறுதலும் அளிக்காவிடிலும்
                   மீதி நாட்களில் இம்சைகளை இறைத்து
                   கொடுமைபடுத்தாதிருக்கலாகாதா?
                  இந்நாள் வரை, குடியிருந்த கோயிலா, இல்லை
                 அணிசெய்த மேலாடையா, பாழ்பட்டதால்
                 வேறொன்றை நாடியோ, விமோசனதை தேடியோ
                 காலவெளி பயணத்திற்கான ஆரம்ப அறிகுறிகளோ........

                          நீல பத்மநாபன்








No comments: