Friday, December 30, 2016

அஞ்சலி


                     அஞ்சலி
     
                     தகனக்க்ரியை நடந்து முடிந்து நாட்கள்
                   பல நகர்ந்துவிட்டிருந்தும்
                  விம்மிக்கொண்டிருக்கும் நெஞ்சம்
                                                *         *          *
                           வீட்டின், வெளியின் சந்தடிகள்
                        சத்தங்கள் அதிகமாய் எட்டாது
                         நிம்மதியாய் இளைப்பாற
                           பின்பக்கம் ஒதுக்குப்புறமாய்
                          அவுட்ஹௌஸ்போல் அமைந்திருந்த
                         ஒற்றை தனியறையில்
             தென்பட்டது தேன்கூடு ஒன்று....
                          சுற்றி வட்டமிடும் ஒன்றிரண்டு தேனீக்கள்...
                          கொட்டிவிடப்போகிறது எனப் பயன்று
             திறக்காமல் கிடந்த் அறைக்கதவு..
                         மனசு கேட்காமல் அடிக்கடி போய்
                        திறந்து பார்க்கும் போதெல்லாம்
                         பெரிசாகிக்கொண்டிருந்த கூடு..
                            பக்கத்தில் நிற்கும் தென்னையிலேறி
                    தேங்காய் வெட்ட வருகிறவனிடமும்
                     தெரிந்த மற்ற வேலையாட்களிடமும்
                  தேனை முடிந்தால் எடுத்துக்கொண்டு
                  கூட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த
                  வேண்டியபோது, ஏமாற்றம்.......
       ‘                  ”கொஞ்சம் மண்ணெண்ணை வாங்கித்தந்தால்
                   கொளுத்திவிடலாம்என்றார்கள்...
                          சோகத்தில் கலங்கிய நெஞ்சம்;
                        எத்த்னை நாள் விடாமுயற்சி,,.
                  அதற்கு இப்படியொரு சித்திர வதையும்
                           மரண தண்டனையுமா…… 
                         தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப்பார்த்தும்
                  கொளுத்திவிடத்தான் ஆலோசனை வழங்கினார்கள்....
                    விவசாய இலாகா காரியாலயம்,
                               தேன் கண்காட்சி இடம்  எல்லாம் விசாரித்துப் பார்த்தும்
                நடக்கவில்லை, “சுத்தமான தேனிருக்குது ,
                               வேணுமுன்னா வாங்கிகிட்டுப்போங்கோ,
                              நீங்க என்னதான் பைசா கொடுக்கலாமுண்ணு
                              சொன்னாலும் யாரும் வேலை மெனக்கெட்டு
                               வரமாட்டாங்க”    கடைசியில்...................
                              ஒருவன் மண்ணெண்ணை இறைக்க,
              இனியொருவன், மின் வொயறிலும், அறையிலும்
              தீ பரவாதிருக்க நீர் தெளிக்க..,வேலையெல்லாம் முடித்து
               இரட்டைக் கூலி வாங்கி சென்றிட.....

                                                                  *     *      *
                                கொலைகாரா என கூவியவாறு மரணப் பதட்டத்துடன்
                              கூட்டம் கூட்டமாய்ப் பாய்ந்து பறந்து வந்து   
                            இன்றும் தன்னை  கொட்டிக்கொண்டிருக்கும் தேனீக்கள்          
                    
                                                                                              நீல பத்மநாபன்
 

      


      

No comments: