Thursday, September 8, 2016

                                சபதம்

                     கரடுமுரடான பாதைகள்
                     வெளிச்சமில்லா வீதிகள்
                      இதுவா அதுவா என தத்தளிக்க வைத்த
                       தசா சந்திகள்...
                        ஜன்மாந்திர துயரங்களிலிருந்து விமுக்தி பெற
                        போதுமென்ற நிறைவில் நெஞ்சை
                        பக்குவப்படுத்த முயற்சி..
                        நோக்கமில்லா வாழ்வு சுமையாகி கனத்தபோது
                        மானிடசேவையில் ஈடுபட முனைகையில்
                         ஒத்துழைக்காமல் சண்டித்தனம் பண்ணும்
                         உறுப்புக்கள்...
                       தீரா வியாதிகள்... ஓயா துன்பங்கள்..
                        நாளாக நாளாக எதையும் தாங்க இயலாமல்
                         நைந்துபோய்கொண்டிருக்கும்
                         கோழை மனம்..
                         கணத்திற்கு கணம்
                         செத்துச் செத்துப் பிழைப்பு...
                        இவ்வாறெல்லாமாயினும்
                         தன்னை தானே அழித்துக்கொள்ளல் இல்லை
                       இறுதி அழைப்பு கிடைப்பதுவரை
                     வாழ்ந்தேத் தீருவது.....

                                                                  நீல பத்மநாபன்



No comments: