Tuesday, December 1, 2015

சொற்சிற்பம்


                                          சொற்சிற்பம்

                 மெட்டை மட்டும் மனதில் கொண்டு
               ராகமாய் ஒலி செய்யும்
                     நாத பிரம்மத்தில்
              ஒன்று கலந்து
              பாகாய் லயித்து
                  அமர சஞ்சாரம் செய்யும் மனமே
                 பொருள் பற்றி அலட்டிக் கொள்ளாது
             அடுக்கிடும் வெறும் சொற்களின்
                 சிற்பத்தில் லயித்திட
             தயக்கமேன்……?!

                   நீல பத்மநாபன்