Monday, June 29, 2015

வண்டிக்காளை



வண்டிக்காளை
நீல பத்மநாபன்

காரணம் புரியாமல்
புகைமூட்டமாய் எந்நேரமும்
மனதில் சூழ்ந்துகொண்டிருக்கும்
சோக வெறுமை,
சுழந்துகொண்டிருக்கும்
அமைதியின்மை
எதையும் செய்யவிடாமல்
கிரியாசக்தியுடன்
ஒத்துழைக்காத
உறுப்புக்கள்
இன்னும் எத்தனை நாள்,
எத்தனை காதமென்று
பாரவண்டியை இழுத்துக்கொண்டிருக்கையில்
சுரீர் சுரீரென்று சாட்டையடிகள்
அதட்டல்கள்.....ஆக்ஞைகள்...எள்ளல்கள்...
ஐயோ பாவம் என்று பார்வையாளர்கள்
பரிதவிக்க….
இன்னும் பாரமேற்றமாட்டார்களா
கொஞ்ச தூரம் கூட போக மாட்டோமா
என்றுஆசைகொள்ளும் அதிசயக் காளைகள்....!

28-6-2015