Tuesday, April 12, 2011

எழுத்து அனுபவங்கள்

“ கலைப்பணியில் ஈடுபாடு உடையவர்கள் தமக்கு உகந்த பாணியில் சுதந்திரமாக ஒருவிதசமர்ப்பண மனப்பான்மையுடன், ஆத்மதிருப்தியுடன் செயல்பட்டுவருகையில் அவர்கள் அறிந்தும் அறியாமலும் அவர்கள் நெற்றியில் ஒரு முத்திரை (label) குத்தப்படுகிற்து.இது, கலைபிரிவுகள் பாற்பட்டதாக இருக்கலாம், எழுத்துத்துறையென்றால் மொழி, நடை, இலக்கியப்பிரிவுகள்-கதை, கவிதைபோன்றவை சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம்.ஏனைய கலைவகையறாக்கள்-ஆடல், பாடல், ஓவியம், சிற்பம், கூத்து எல்லாம் இதில் அடங்கும்.தமிழ் எழுத்தாளன், மலையாள எழுத்துகாரன், கவிஞன், கதாசிரியன், நாவலாசிரியன்,நாடகாசிரியன்,தவிர ஓவியன்,சிற்பி, பாடகன், நாட்டியக்காரி இத்யாதி,இத்யாதிமுத்திரைகள்.ரவீந்திரநாத டாகூரை கவிஞர், கதாசிரியர்,நாவலாசிரியர் என்றெல்லாம் கூறுகட்டி விமரிசையாக திறனாய்வாளர்கள் விமர்சித்துக்கொண்டிருக்கையிலேயே அவர்உண்மையான கலைஆர்வத்துடன் ,அனுபூதியுடன் ஓவியக்கலையிலும்(painting) தன் செய்த்திறனை காட்டிக்கொகொண்டிருந்தார். எனவே,கலைஞன் தன் கலைஆர்வத்தை சமனப்படுத்த,வெளிப்பிரகடனம் செய்ய,மற்றவர்களின் முத்திரைகளைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல்- அனால் ஆங்கிலத்தில் சொல்வார்களல்லவா-a rolling stone gathers no mass என்று,அப்படிஏனோதானோ என்றில்லாமல் செய்வதை திருந்தச் செய் என்ற முதுமொழிக்கேற்ப தன் முழு சித்தத்தையும் சீரிய முறையில் ஒருமுகப்படுத்தி-அது ஐந்து வரி கவிதையாக இருக்கலாம்,ஆயிர பக்க நாவலாக இருக்கலாம் செயல்பட்டுக்கொண்டிருப்பதுதான் சிலாக்கியமானது.”
நீல பத்மநாபன்

31-3-2011-ல் திருவனந்தபுரம் பாரத்பவன் நிகழ்த்திய தேசீய ஒருமப்பாடு கருத்தரங்கில் எழுத்தனுபவங்கள்
என்றஎழுத்தாளர் பட்டறை துவக்க உரையிலிருந்து.